Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் 15வது நாளாக இன்றும் மாற்றமில்லை.
ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.110.85க்கும், டீசல் ரூ.100.94க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Tamilnadu news update: ஆளுனரின் பாதுகாப்பு வாகனங்கள் மீது கற்கள், கொடிகள் வீசப்படவில்லை என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.
“அரசியல் செய்யவில்லை”
ஆளுனரின் பாதுகாப்பு வாகனங்கள் மீதான தாக்குதல் விவகாரத்தில் பாஜக அரசியல் செய்யவில்லை என்று அக்கட்சியின் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டியளித்தார்.
India News Update: பாரம்பரிய மருந்துகளுக்கு விரைவில் ஆயுஷ் முத்திரை அறிமுகம் செய்யப்படும். பாரம்பரிய சிகிச்சை பெற வெளிநாட்டினருக்கு ஆயுஷ் விசாவும் அளிக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
World news update: தொடர்ந்து போராட்டம் நடந்துவரும் நிலையில், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
IPL Update: ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பஞ்சாப் அணியை டெல்லி கேபிட்டல் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதன்மூலம், 6 ஆட்ங்களில் டெல்லி அணி 3ஆவது வெற்றி கண்டது. 7 ஆட்டங்கள் விளையாடியுள்ள பஞ்சாப் கிங்ஸ் 3 வெற்றி 4 தோல்விகளை கண்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
ஆளுநரின் சுற்றுப் பயணத்தின்போது பாதுகாப்பு குறைபாடு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு என திறம்பட செயலாற்றாத திமுக அரசின் மீது அரசியல் சாசனத்தின் படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர், பிரதமருக்கு அதிமுக நிர்வாகி ஆர்.எம்.பாபு முருகவேல் மனு அனுப்பியுள்ளார்.
பெட்ரோல்-டீசல் விலை உயர்வு காரணமாக கேரளாவில் மே 1 முதல் பேருந்து, ஆட்டோ, டாக்சி கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளது.
தமிழக ஆளுனர் உயிருக்கு அச்சுறுத்தல் என அதிமுக புகார் மனு அளித்துள்ளது.
டெல்லி, விஞ்ஞான் பவனில் குடிமைப்பணி அலுவலர்களிடையே பிரதமர் மோடி இன்று உரையாற்றுகிறார்.
முன்னோடி திட்டங்களில் சிறந்து விளங்கிய 16 பேருக்கு விருதுகளை வழங்குகிறார் பிரதமர்.