திருப்பதி,– திருமலை ஏழுமலையானுக்கு, ‘அசோக் லேலண்ட்’ நிறுவனம் நேற்று லாரியை நன்கொடையாக வழங்கி உள்ளது.
திருமலை ஏழுமலையானுக்கு, சென்னையைச் சேர்ந்த அசோக் லேலண்ட் நிறுவனம், தன் புதிய தயாரிப்பு வாகனங்களை நன்கொடையாக அளித்து வருகிறது. அதன்படி தற்போது புதிதாக தயாரித்த 18.38 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மினி லாரியை, நேற்று காலை நன்கொடையாக அசோக் லேலண்ட் நிறுவனம் வழங்கியது.
அந்நிறுவன மூத்த துணைத் தலைவர் சஞ்சீவ் குமார், ஏழுமலையான் கோவில் வாயிலில் லாரிக்கு வாழை மரம் கட்டி, மலர் மாலை அலங்கரித்து, மஞ்சள், குங்குமம் வைத்து பழங்கள் சமர்ப்பித்து, தேங்காய் உடைத்து கற்பூர ஆரத்தி காட்டினார். பின், அதற்கான சாவி மற்றும் ஆவணங்களை தேவஸ்தான அதிகாரிகளிடம் சஞ்சீவ் குமார் வழங்கினார்.
திருப்பதி,– திருமலை ஏழுமலையானுக்கு, ‘அசோக் லேலண்ட்’ நிறுவனம் நேற்று லாரியை நன்கொடையாக வழங்கி உள்ளது.திருமலை ஏழுமலையானுக்கு, சென்னையைச் சேர்ந்த அசோக் லேலண்ட் நிறுவனம், தன் புதிய
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.