புதுச்சேரி : இரண்டாம் உலகப்போர் நிறைவு பெற்றதன் 77ம் ஆண்டு நினைவு நாள், புதுச்சேரியில் நேற்று கடைபிடிக்கப்பட்டது.கடற்கரை சாலையில் உள்ள போர் வீரர் நினைவுத் துாணில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.இரண்டாம் உலகப்போரின் போது உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்தியா, பிரான்ஸ் நாட்டின் தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டு, மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
பிரெஞ்சு துணை துாதரக தலைவர் கரோல் ஜோஸ், அரசு சார்பில் கலெக்டர் வல்லவன், டில்லியில் உள்ள பிரெஞ்சு துாதரக பாதுகாப்பு துணை தலைவர் கொலோனெல் நோர்பெர் கேன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.அயலக வாழ் பிரெஞ்சு குடிமக்களுக்கான உள்ளூர் பிரதிநிதிகள் பலராமன் பிஷா, பிரதீபன் சிவா, பிரெஞ்சு முன்னாள் ராணுவ வீரர்கள், புதுச்சேரியில் வாழும் பிரெஞ்ச் குடியுரிமை பெற்றோர் உள்படபலர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி : இரண்டாம் உலகப்போர் நிறைவு பெற்றதன் 77ம் ஆண்டு நினைவு நாள், புதுச்சேரியில் நேற்று கடைபிடிக்கப்பட்டது.கடற்கரை சாலையில் உள்ள போர் வீரர் நினைவுத் துாணில் மலர் வளையம் வைத்து
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.