டோக்கியா: ஜப்பானில் நடக்கும் குவாட் மாநாட்டில் பங்கேற்க சென்றுள்ள பிரதமர் மோடி அமெரிக்கா, ஜப்பான் அதிபர்களுடன் முக்கிய பேச்சு நடத்தினார்.
இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இடம்பெற்றிருக்கும் குவாட் அமைப்பின் இரண்டாவது உச்சி மாநாடு டோக்கியோவில் நாளை (மே.24) நடக்கிறது. முன்னதாக இன்று இந்தோ – பசிபிக் பொருளாதார வளர்ச்சிக்கான கூட்டத்தில் பிரதமர் மோடி சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது: இந்திய பசிபிக் நாடுகள் அளவில் பொருளாதார முன்னேற்றம் ஏற்பட நாம் அனைவரும் பாடுபட வேண்டும். இதற்கு இந்தியா துணை நிற்கும்.
எதிலும் வெளிப்படையாகவும், நம்பிக்கை, உரிய நேரத்தில் எதையும் செய்து முடிக்கும் பாங்கு இந்தியாவிடம் உள்ளது. மேலும் பொருளாதார சவால்களை சமாளிக்க ஒரு பொதுவான திட்டம் உருவாக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜப்பான் பிரதமர் புமியோ கிஸிதா உள்ளிட்டோருடன் கலந்துரையாடினார்.
டோக்கியா: ஜப்பானில் நடக்கும் குவாட் மாநாட்டில் பங்கேற்க சென்றுள்ள பிரதமர் மோடி அமெரிக்கா, ஜப்பான் அதிபர்களுடன் முக்கிய பேச்சு நடத்தினார்.இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.