Month: May 2022
கீர்த்தி சுரேஷிற்கு 35 அடியில் கட்-அவுட் வைத்த ரசிகர்கள்
தெலுங்கில் பரசுராம் இயக்கத்தில் மகேஷ்பாபு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள படம் சர்காரு வாரி பாட்டா. தமன் இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட் அடித்துள்ளன. இதனால் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. அதேசமயம் முதல்நாளிலேயே 50 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முக்கியமாக மகேஷ்பாபுவின் நடிப்பை பாராட்டி வரும் தெலுங்கு சினிமா ரசிகர்கள் கீர்த்தி சுரேஷ் நடிப்பையும் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதோடு … Read more
சீன அதிபர் ஜி ஜின்பிங் பதவி விலகல்..? சமுக வலைத்தளத்தில் காட்டுத்தீ போல பரவும் தகவல்..!
சீன நாட்டின் பொருளாதார மந்தநிலை ஏற்பட அடிப்படை காரணமாக அமைந்த கடுமையான கோவிட் -19 லாக்டவுன் கட்டுப்பாடுகளை விதித்துத் தவறான நிர்வாகச் செய்ததைத் தொடர்ந்து அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் தனது பதவியில் இருந்து விலகக்கூடும் என்று சீன சமூக ஊடகங்கள் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. பல பிரச்சனைகளையும், மக்கள் எதிர்ப்புகளையும் கடந்து வந்த ஜி ஜின்பிங் இதையும் கடந்து அதிபர் பதவியைத் தக்கவைத்துக்கொள்ளவாரா..? எஸ்பிஐ ஊழியர் செய்த சிறு பிழையால்.. தவறான வங்கி கணக்குகளுக்குச் சென்ற … Read more
திருச்சி ‘தலைவலி’க்கு தீர்வு: 3 மாதத்தில் ரெடியாகும் அரிஸ்டோ மேம்பாலம்!
க.சண்முகவடிவேல் KN Nehru assures Trichy Aristo bridge work completes within 3 months: திருச்சியில் 10 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த ஜங்சன் அரிஸ்டோ மேம்பால கட்டுமானப் (சென்னை சாலையை நோக்கிய) பணிக்கு மத்திய பாதுகாப்புத் துறைக்கு சொந்தமான 66 சென்ட் நிலம் பெறப்பட்டதையடுத்து நிறைவடையாமல் இருக்கும் மேம்பாலத்தின் இறுதிகட்டப் பணிகளை முடிப்பதற்கான வேலைகளை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார். திருச்சி மாநகரில் மிகவும் பழமையான, அகலம் குறைந்த திருச்சி ஜங்ஷன் ரெயில்வே … Read more
#BigBreaking || திரிபுரா முதலமைச்சர் பிப்லப் குமார் தேப் திடீரென ராஜினாமா.!
திரிபுரா முதலமைச்சர் பிப்லப் குமார் தேப் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். திரிபுரா ஆளுநரிடம் தனது பதவி விலகல் குறித்த கடிதத்தை முதலமைச்சர் பிப்லப் குமார் தேப் வழங்கியுள்ளார். மேலும், திரிபுராவின் புதிய முதலமைச்சர் இன்று அறிவிக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேற்று திரிபுரா முதலமைச்சர் பிப்லப் குமார் தேப் சந்தித்த நிலையில், தற்போது அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். Source link
கல்லூரி முதல்வரை மாணவி காலில் விழக் கட்டாயப்படுத்திய ஏபிவிபி தலைவர் – தேசிய மாணவர் சங்கம் கண்டனம்
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள எஸ்.ஏ.எல் பாலிடெக்னிக் கல்லூரியில் ஏ.பி.வி.பி தலைவர் ஜெய்ஸ்வால் மற்றும் பிற உறுப்பினர்கள் சேர்ந்து, கல்லூரி பெண் முதல்வரை மாணவி ஒருவரின் காலில் விழுமாறு கட்டாயப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தச் சம்பவம் கடந்த வியாழன் அன்று நடந்ததாகக் கூறப்படும் நிலையில், இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில், கல்லூரி பெண் முதல்வர் மாணவியின் கால்களில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார். இந்தச் செயலுக்குக் … Read more
பஞ்சு விலை உயர்வால் நூற்பாலை தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம்
வரலாறு காணாத அளவில் பஞ்சு விலை உயர்ந்துள்ளதால் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் நூற்பாலைகளில் பணியாற்றும் ஏராளமான தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள நூற்பாலைகள் வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்யும் பஞ்சை நூலாக நூற்றுப் பிற இடங்களுக்கு ஏற்றுமதி செய்கின்றன. சில நாட்களுக்கு முன் 356 கிலோ கொண்ட ஒரு கேண்டி பஞ்சு 97 ஆயிரம் ரூபாய் முதல் ஒரு இலட்ச ரூபாய் வரை விற்பனையானது. இப்போது ஒரு இலட்சத்து … Read more
தக்காளி விலை கிடு கிடுவென உயர்வு: தமிழக விவசாயிகளுக்கு பலன் இல்லை
திருப்பூர்: தக்காளி விலை உயர்வால் தங்களுக்கு பயனில்லை என தமிழக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த 10 நாட்களாக, பல்வேறு மாவட்டங்களில் கோடைமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக காய்கறி விளைச்சல் பாதிக்கப்பட்டு, வரத்து குறைந்த நிலையில், தக்காளி விலையும் உயா்ந்தது. விளைச்சல் அதிக அளவில் இருந்ததால் கடந்த மாதம் வரை ஒரு கிலோ தக்காளி ரூ.15 வரை விற்கப்பட்டது. பின்னா் பரவலாக மழை பெய்ததன் காரணமாக, தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்தும் குறைந்தது. இதனால் கடந்த … Read more
உ.பி.யை தொடர்ந்து ம.பி.யிலும் மதரஸாக்களில் தேசிய கீதம் பாடுவதை கட்டாயமாக்க முடிவு
போபால்: உத்தரபிரதேசத்தில் அனைத்து மதரஸாக்களிலும் தேசிய கீதம் பாடுவது நேற்று முன்தினம் முதல் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேச மதரஸா கல்வி வாரிய பதிவாளர் கடந்த 9-ம் தேதி பிறப்பித்த உத்தரவின்படி, உ.பி. மதரஸாக்களில் தேசிய கீதம்பாடுவது அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில், ம.பி. மதரஸாக்களிலும் தேசிய கீதம் கட்டாயமாக்க பரிசீலிக்கப்படுகிறது. இதுகுறித்து மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ராவிடம் செய்தியாளர்கள் நேற்று கேள்வி எழுப்பினர். இதற்கு அமைச்சர் பதில் கூறுகையில், “இது நல்ல விஷயம். மத்திய பிரதேசத்திலும் … Read more
ரஷ்ய – அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர்கள் ஆலோசனை: உக்ரைன் போர் தொடங்கியபின் முதன்முறையாக பேச்சு
ரஷ்யா மற்றும் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர்கள் தொலைபேசியில் பேசிக் கொண்டுள்ளனர். கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலைத் தொடங்கியபின்னர் முதன்முறையாக இந்த பேச்சுவார்த்தை நடந்துள்ளது. ஆனாலும், ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்கெய் ஷொய்குவும், அமெரிக்க பாதுகாப்பு செயலர் லாய்ட் ஆஸ்டினும் உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவது பற்றி ஆக்கபூர்வ ஆலோசனை ஏதும் மேற்கொள்ளப்படவில்லை எனத் தெரிகிறது. இது குறித்து அமெரிக்க பாதுகாப்பு துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ஆஸ்டின் … Read more