சென்னை: உணவளிப்பதை வெறும் வணிகமாகப் பார்க்காமல் அறம் என உணர்ந்து, தரமான உணவை வழங்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மனிதரின் அடிப்படைத் தேவைகளுள் தலையாயது உணவு. மக்களுக்குப் பாதுகாப்பான உணவு கிடைப்பதை உறுதிசெய்ய அன்றாடம் நடவடிக்கைகள் எடுத்துவருகிறோம் என முதல்வர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
