ப்ரி பயர் கேமின் user id, password-ஐ சக நண்பர்கள் திருடிக் கொண்டதால் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு இளைஞர் தற்கொலை..!

கரூரில் ப்ரீ பயர் ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையான 23 வயது இளைஞர் வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தனியார் கல்லூரியில் படித்து வந்த சஞ்சய், குடும்ப வறுமையால் கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் ஓராண்டாக வீட்டிலேயே இருந்து நண்பர்களுடன் கேட்டரிங் உள்ளிட்ட வேலைகளை செய்து வந்துள்ளார்.

இதனிடையே ப்ரீ பயர் கேமுக்கு அடிமையான சஞ்சய் இரவு பகலாக கேமை விளையாடி வந்த நிலையில், அவரது user I’d, password -ஐ நண்பர்கள் சிலர் திருடிவிட்டதாக கூறப்படுகிறது.

அந்த ஐ.டியின் மதிப்பு சுமார் 1 லட்சம் ரூபாய் இருக்கும் எனக்கூறி ஒரு நண்பரிடம் புலம்பி வந்த சஞ்சய், நேற்று தனது தாய் வேலைக்கு சென்ற நேரத்தில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.