தேசிய விண்வெளி வளர்ச்சி மற்றும் அங்கீகார மையத்தைத் திறந்து வைத்தார் பிரதமர் மோடி.!

இஸ்ரோவின் கட்டமைப்பைத் தனியார் துறையினர் பயன்படுத்துவதையும், கூட்டாகச் செயல்படுவதையும் மத்திய அரசு உறுதி செய்துள்ளதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

குஜராத்தின் அகமதாபாத்தில் இந்திய தேசிய விண்வெளி வளர்ச்சி மற்றும் அங்கீகார மையத்தின் தலைமையகத்தைப் பிரதமர் மோடி திறந்து வைத்துப் பார்வையிட்டார்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, அறிவியல் மனப்பான்மை உடையோர் அரசு அல்லது தனியார் துறைகளில் இணைந்து செயல்பட இன்ஸ்பேஸ் மையம் வாய்ப்பளிக்கும் எனத் தெரிவித்தார்.

இன்ஸ்பேஸ் மூலம் விண்வெளித் துறையில் சீர்திருத்தங்களைக் கொண்டுவந்துள்ளதாகவும், தனியார் நிறுவனங்கள் விண்வெளித் துறைக்கான பொருட்களை வழங்குவோராக மட்டுமல்லாமல், பெரும் வெற்றியாளராகப் பங்காற்ற முடியும் என்றும் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.