நாமக்கல் அருகே வேன் மோதி உயிரிழந்த 2 காவலர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஏ.கே.சமுத்திரம் தனியார் கல்லூரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரியும், காரும் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தை அடுத்து போக்குவரத்தை சரி செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். அப்போது வேகமாக வந்த டூரிஸ்ட் வேன் மோதியதில் புதுசத்திரம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சந்திரசேகர், இராசிபுரம் காவல் நிலைய தலைமை காவலர் தேவராஜன் ஆகிய 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் காயம் அடைந்தனர்.
இந்த நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்த 2 காவலர்களின் குடும்பத்திற்கு தலா ரூ .25 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், உயிரிழந்த காவலர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் அரசு பணி வழங்கவும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.