50 ஆயிரம் பேர் பாதிப்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சிட்னி:கனமழை காரணமாக ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனால், 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

latest tamil news


ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளில் கடந்த ஐந்து நாட்களாக கன மழை பெய்து வருகிறது. 50 லட்சம் பேர் வசிக்கும் சிட்னி நகரம் கன மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஆறுகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து, சிட்னி நகருக்குள் புகுந்துள்ளது. இதையடுத்து, 50 ஆயிரத்திற்கும் அதிகமானோரை வீடுகளை விட்டு வெளியேறுமாறு அரசு எச்சரித்துள்ளது. மேலும் வீடுகளில் சிக்கியுள்ளோரை படகுகள் மூலம் மீட்கும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.

latest tamil news


இதற்கிடையே, நியூ சவுத் வேல்ஸ் கடற்பகுதியில், 21 பேருடன் தத்தளித்த சரக்கு கப்பலை துறைமுகத்திற்கு இழுத்து வர முயற்சி மேற்கொள்ளப்பட்டது.ஆனால், கடும் சூறாவளி வீசியதால், அப்பணி தோல்வியடைந்தது. இதையடுத்து, கப்பல் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.