கடந்த 09ஆம் திகதி மஹரகமவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் இணைந்து கொண்ட பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த பொலிஸ் உத்தியோகத்தர் இன்று அதிகாலை காலி முகத்திடல் போராட்டப் பகுதியில் செருப்பு அணிந்து கொண்டு நின்று கொண்டிருந்த போது கோட்டை பொலிஸ் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த அதிகாரி பொலிஸ் போக்குவரத்து பிரிவில் பணிபுரியும் கான்ஸ்டபிள் ஒருவர் ஆவார்.
அதிகாரி பொலிஸ் சீருடையுடன் காலணிகளை அணிந்து சந்தேகத்திற்கிடமான வகையில் அங்கு தங்கியிருந்தமையினால் கைது செய்யப்பட்டுள்ளதாக கோட்டை பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அவருக்கு பொலிஸார் பிணை வழங்கி விடுவிக்கப்படுவார் என்றும் அந்த உயர் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்
எனினும்இ பொலிஸ் தலைமையகம் அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க உள்ளது என்றும் அவர் மேலும் அறிவித்துள்ளார்.