
லீனா மணிமேகலைக்கு நீதிமன்றம் சம்மன்!
லீனா மணிமேகலை இயக்கியுள்ள காளி என்கிற ஆவணப்படத்தின் போஸ்டர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. காரணம், அந்த போஸ்டரில் காளி வேடம் போட்டிருந்த பெண் ஒரு கையில் ஓரினச்சேர்க்கையாளரின் கொடியும், மற்றொரு கையில் சிகரெட்டும் பிடித்தபடி போஸ் கொடுத்திருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த போஸ்டர் மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக இருப்பதாக கூறி அவரை கைது செய்ய வேண்டும் என்று பலரும் குரல் கொடுத்தார்கள். ஆனால் அதையடுத்து எந்த மிரட்டலுக்கும் நான் பயப்பட மாட்டேன் என்று பதில் கொடுத்த லீனா மணிமேகலை, சிவன் – பார்வதி வேடமணிந்த இருவர் புகை பிடிக்கும் போட்டோவை மீண்டும் வெளியிட்டு இன்னொரு அதிர்ச்சியை கொடுத்திருந்தார்.
இந்த நிலையில் அவர் மீது உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஹிந்து கடவுளை இழிவுபடுத்தியதற்காக லீனா மணிமேகலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்கறிஞர்கள் வாதாடினார்கள். இதையடுத்து லீனா மணிமேகலை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று நீதிபதி சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.