டெல்லி: ரூ.3,600 கோடி வி.வி.ஐ.பி ஹெலிகாப்டர் ஊழல்; 4 முன்னாள் விமானப்படை அதிகாரிகளுக்கு சம்மன்!

வி.வி.ஐ.பி-களுக்காக ஹெலிகாப்டர் வாங்கிய ரூ.3,600 கோடி ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பதாகக் கூறப்பட்ட வழக்கில், இந்திய விமானப்படையைச் சேர்ந்த 4 முன்னாள் அதிகாரிகளுக்கு, ஜூலை 30-ம் நேரில் ஆஜராகுமாறு டெல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருக்கிறது. கடந்த 2010-ல், அப்போதிருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின், பாதுகாப்பு அமைச்சகம், 556.262 மில்லியன் யூரோ மதிப்புள்ள 12 AW101 டூயல் யூஸ் ஹெலிகாப்டர்கள் ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

4 முன்னாள் இந்திய விமானப்படை அதிகாரிகளுக்கு சம்மன்

இந்த ஹெலிகாப்டர்கள், வி.வி.ஐ.பி-க்கள் மற்றும் பிற முக்கிய பிரமுகர்களை ஏற்றிச் செல்வதற்காக வாங்கப்பட்டதாகக் கூறப்பட்டன. இந்த ஒப்பந்தத்தின் ஒட்டுமொத்த மதிப்பு, ரூ.3,600 கோடி என்று கூறப்பட்டது. பின்னர் இந்த ஒப்பந்தத்தில், அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துக்கு பயனளிக்கும் வகையில், ஹெலிகாப்டர் விவரக்குறிப்புகள் அசல் ஒப்பந்தத்திலிருந்து மாற்றப்பட்டதாக இதில் குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கை சி.பி.ஐ விசாரித்து வருகிறது.

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஊழல்

இந்த நிலையில், தற்போது இந்த வழக்கு தொடர்பாக ஜூலை 30-ம் நேரில் ஆஜராகுமாறு, இந்திய விமானப்படையைச் சேர்ந்த 4 முன்னாள் அதிகாரிகளுக்கு டெல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருக்கிறது. இந்த விவகாரத்தில் பல காங்கிரஸ் தலைவர்களின் பெயர்கள் சர்ச்சைக்கு இழுக்கப்பட்டதையடுத்து, இந்த விவகாரம் அரசியல் திருப்பத்தை ஏற்படுத்தியது. மேலும், ஹெலிகாப்டர் கொள்முதல் ஒப்பந்தத்தை எளிதாக்குவதற்காக லஞ்சம் பெற்றதாகத் துபாய், இந்தியாவைச் சேர்ந்த சில இடைத்தரகர்களும், ஏஜென்சிகளால் கைதுசெய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.