"மொழி அரசியல் செய்யும் பலரின் பெயர் கூட தமிழில் இல்லை" – ஆளுநர் தமிழிசை விமர்சனம்

மொழி அரசியல் செய்யும் பலரின் பெயர் கூட தமிழில் இல்லை என்று தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை கூறினார். மொழி அவசியம் என்பதை தாண்டி அரசியல் மட்டுமே செய்கிறார்கள் எனவும், விமர்சிப்பவர்களுக்கு தமிழில் பெயர் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். எல்லா விதத்திலும் நாங்கள் தமிழ் பற்று உள்ளவர்கள் எனவும் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.