பிலிப்பைன்சில் துப்பாக்கி சூடு; 3 பேர் பலி| Dinamalar

மணிலா : பிலிப்பைன்சில் பல்கலைக்கழக வாசல் அருகே மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் உயிரிழந்தனர்.

ஆசிய நாடான பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் உள்ள ஒரு பல்கலையில் நேற்று பட்டமளிப்பு விழா நடந்தது. அப்போது, பல்கலை வாசல் அருகே நின்று கொண்டிருந்த ஒருவர், துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இந்த திடீர் தாக்குதலில், லமிடன் நகர முன்னாள் மேயர் ரோசிட்டா புரிகே, அவரது உதவியாளர் மற்றும் பல்கலை காவலாளி ஆகிய மூவரும் குண்டு பாய்ந்து அதே இடத்தில் உயிரிழந்தனர்.

புரிகேவின் மகள் காயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார்.இதையடுத்து, பட்டமளிப்பு விழா ரத்து செய்யப்பட்டது.துப்பாக்கிச் சூடு நடத்தியவர் விசாரணைக் கைதி என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.