சபரிமலை :சபரிமலையில் நிறைபுத்தரிசி பூஜைக்காக தேவசம்போர்டு வயலில் இருந்து நெற்கதிர்கள் நேற்று அறுவடை செய்யப்பட்டன.
மழை வந்தால் தடை ஏற்படாமல் இருக்க முன்கூட்டி இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது. சபரிமலையில் நிறைபுத்தரிசி பூஜை வரும் ஆகஸ்ட் 4, அதிகாலை 5.40 மணிக்கு நடக்கிறது. இதற்காக முந்திய நாள் மாலை 5:00 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. இந்த பூஜைக்கான நெற்கதிர்கள் நேற்று தேவசம்போர்டுக்கு சொந்தமான செட்டிக்குளங்கரை வயல்களில் இருந்து அறுவடை செய்யப்பட்டன.
தேவசம்போர்டு தலைவர் அனந்தகோபன் நெற்கதிர்களை அறுத்து துவங்கி வைத்தார். பின் நெற்கதிர்கள் ஊர்வலமாக பம்பை கொண்டு வரப்பட்டு அங்கு வைக்கப்பட்டுள்ளது.மூன்றாம் தேதி பம்பையில் இருந்து சன்னிதானம் கொண்டு செல்லப்பட்டு 4ல் பூஜை நடக்கும். மழை வலுத்தால் நெற்கதிர்கள் கொண்டு வருவதில் தடை ஏற்படாமல் இருக்க முன்கூட்டியே அறுவடை நடத்தியதாக தேவசம்போர்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
சபரிமலை :சபரிமலையில் நிறைபுத்தரிசி பூஜைக்காக தேவசம்போர்டு வயலில் இருந்து நெற்கதிர்கள் நேற்று அறுவடை செய்யப்பட்டன.மழை வந்தால் தடை ஏற்படாமல் இருக்க முன்கூட்டி இந்நடவடிக்கை
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்