தீமிதி திருவிழாவின் போது குண்டத்தில் தவறி விழுந்த பக்தர், விழுப்புரம் அருகே பரபரப்பு..!

தீமிதி திருவிழாவில் தீ குண்டத்தில் பக்தர் தவறி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், கோட்டகுப்பத்தில் உள்ள பச்சைய அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் நூற்றுகணக்கான பக்தர் திருவிழாவில் பங்கேற்றனர். பக்தர்கள் தங்களின்  நேர்த்திகடனை நிறைவேற்றுவதற்காக பக்தர்கள் தீமித்தனர். அப்போது பக்தர் ஒருவர் பால் குடத்துடன் தீமிதிக்க இறங்கியுள்ளார்.

அப்போது, அவர் குண்டத்தில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்தார். விழுந்த சில  நிமிடங்களிலேயே அவர் எழுந்து குண்டத்தை கடந்து சென்றுவிட்டார். இதனை அடுத்து, காயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.