தஞ்சாவூர் மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் ஆக்கூர் வ.உ.சி நகரை சேர்ந்தவர் மாரிஸ் (20). இவர் அய்யம்பேட்டையில் இருந்து தனது நண்பரான பிரபாகரனை மோட்டார் சைக்கிளில் அழைத்துக் கொண்டு ஆக்கூர் நோக்கி வந்து கொண்டிருந்தார்.
அப்பொழுது கதிராமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் வந்தபோது எதிரே வந்த மீன்பாடி வாகனம் மோதியது. இதில் படுகாயம் அடைந்த மாரிஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து உள்ளார்.
இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் பலத்த காயமடைந்த பிரபாகரனை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பிரபாகரன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதைத்தொடர்ந்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.