அட்டன் டிக்கோயா வீதியில் , எம்.ஆர். பகுதியில் இடிந்து விழும் கட்டிடங்கள் மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளை நுவரெலியா மாவட்ட கட்டிட ஆய்வு நிறுவன புவியியலாளர்கள் ஆய்வு செய்துள்ளனர்.
இதன் போது சில கட்டிடங்கள் இடிந்து விழும் அபாயத்தில் இருப்பதை அவதானித்ததாக புவியியலாளர் திரு.புத்திக விஜேகோன் தெரிவித்தார். .
குறித்த பகுதியில் அமைந்துள்ள மிகவும் ஆபத்தான நான்கு மாடி கட்டிடத்தில் வெடிப்புகள் காணப்பட்டதாகவும், இதனால் அங்கிருந்தவர்களை வெளியேறுமாறு தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதுதொடர்பாக கட்டடம் கட்ட பெறப்பட்ட அனுமதி மற்றும் திட்டம் மற்றும் முறை கோப்புகளை சரிபார்த்து, இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
வாகனங்கள் செல்ல முடியாமல் இருந்த பகுதியில், காமினிபுர நுழைவு வீதியை திறக்கப்பட்டதையடுத்து இலகு ரக வாகனங்களுக்கு மட்டும் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.