பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்த கொடூர தந்தை கைது..!

பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்த கொடூர தந்தையை காவல்துறையினர் கைது செய்தனர்.

வேலூர் மாவட்டம், விருபாட்சிபுரம்  பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி இவரை விட்டு பிரிந்த நிலையில் அவர் அவரது இரண்டு மகள்களுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், அவரது மகள் பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பின்னர், அவருக்கு அரசு மருத்துவமனையில் அவருக்கு குழந்தை பிறந்தது.

சிறுமிக்கு குழந்தை பிறந்ததால் அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் சமூகநலத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.அவர்கள் நடத்திய விசாரணையில் சிறுமியை அவரது தந்தையே பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதனை அடுத்து, அவர்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

சங்கரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். பெற்றமகளையே பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.