எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் ஹம்பாந்தோட்டை துறைமுக நடவடிக்கைகள் தொடர்கின்றன  

ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தின், துறைமுக சேவைகள், கடல்சார் சேவைகள், எரிசக்தி மையம், துறைமுக கைத்தொழில் பூங்கா மற்றும் ஒருங்கிணைப்பு மூலோபாயம் போன்ற அனைத்து நடவடிக்கைகளும் நாட்டில் தற்போதைய எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியிலும் தொடர்ந்தும் செயற்படுவதாக அந்த துறைமுக நிறுவனம் தெரிவித்துள்ளது.

 மேலும், கப்பல் போக்குவரத்து, வணிகச் செயல்பாடுகள் மற்றும் பிற சேவைகளும் எவ்வித தடைகளும் இன்றி 24 மணிநேரமும் செயல்படுவதற்குத் தேவையான எரிபொருள் வழங்கப்படுவதை ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகம் உறுதி செய்துள்ளது.

அண்மையில் இங்கு வந்த MV Bahri HOFUF என்ற பல்நோக்குக் கப்பலானது, இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட வாகனங்களின் சரக்குகளுடன் மெக்ஸிகோவில் உள்ள வெராக்ரூஸ் துறைமுகத்திற்குப் புறப்பட்டது. இத்தகைய பல்நோக்கு கப்பல்களின் சிறப்பு அம்சம் என்னவென்றால், அவை கொள்கலன்கள் மற்றும் மொத்த பொருட்கள் உட்பட பல்வேறு பொருட்களையும் கொண்டு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டின் தொடக்கத்தில்  இதுவரை கையாளப்பட்ட மிகப்பெரிய வாகன மீள் ஏற்றுமதி, எச்.வி. குளோவிஸ் சாம்பியன் துறைமுகம் வழியாக மேற்கொள்ளப்பட்டுள்ளது

துறைமுகத்திற்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்த, 2022 இன் முதல் பாதியில், துறைமுகம் 1.14 மில்லியன் டொன்களைக் கையாளும் திறனைப் பதிவு செய்ய முடிந்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.