ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்ட அல் ஜவாஹிரி உடல் கிடைக்கவில்லை – தாலிபான்

அமெரிக்கா நடத்திய ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்ட அல் கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் அய்மான் அல் ஜவாஹிரியின் உடல் கிடைக்கவில்லை என, தாலிபான் அமைப்பினர் தெரிவித்து உள்ளனர்.

அமெரிக்காவில் நடைபெற்ற இரட்டை கோபுர தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஒசாமா பின் லேடனுக்கு பிறகு, அல் கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவராக செயல்பட்டு வந்தவர் அய்மான் அல் ஜவாஹிரி. இவர், பல்வேறு தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டு உள்ளார். இவரை, சர்வதேச பயங்கரவாதியாக அமெரிக்கா அறிவித்து தேடி வந்தது.

இதை அடுத்து, தெற்கு ஆசிய நாடான ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில், அல் கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் அய்மான் அல் ஜவாஹிரி தங்கி இருப்பதாக அமெரிக்க உளவுத் துறைக்கு தகவல் கிடைத்தது.

இதை உறுதிப்படுத்திய அமெரிக்க உளவுத் துறை அமைப்பினர், அதிபர் ஜோ பைடன் அனுமதியுடன், கடந்த மாதம் இறுதியில், ட்ரோன் மூலம் அய்மான் அல் ஜவாஹிரி தங்கி இருந்த கட்டடம் மீது தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில், அவர் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்தார்.

US Shooting: அமெரிக்காவில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு – 4 பேர் பலி!

இந்நிலையில், அமெரிக்கா நடத்திய ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்ட அல் கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் அய்மான் அல் ஜவாஹிரியின் உடல் கிடைக்கவில்லை என, தாலிபான் அமைப்பினர் தெரிவித்து உள்ளனர்.

இது தொடர்பாக, தாலிபான் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் சபியுல்லா முஜாகித் கூறுகையில், “அமெரிக்க ட்ரோன் தாக்கிய இடத்தில் இருந்து எந்த உடலும் கிடைக்கவில்லை” என தெரிவித்தார். முன்னதாக ஜவாஹிரி காபூலுக்கு வந்தது பற்றியோ, அங்கேயே தங்கியிருந்தது பற்றியோ தங்களுக்கு எதுவும் தெரியாது என தாலிபான் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.