மாஸ்கோ: ரஷ்ய உயர்மட்ட அதிவேக ஏவுகணை விஞ்ஞானி தேசத்துரோக குற்றச்சாட்டில் ஆராய்ச்சியாளர் அனடோலி மஸ்லோவ் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரஷ்யாவின் ராஸ்கோமாஸ் என்ற இடத்தில் விண்வெளி ஆய்வு மையம் உள்ளது. இங்கு ஒலியை மிஞ்சும் வேகம் கொண்ட ஹைபர்சானிக் விமான தயாரிப்பு ஆராய்ச்சி நடந்து வருகிறது. தொழில்நுட்ப ஆய்வு பிரிவின் இயக்குனரான அலெக்சாண்டர் ஷிப்லியுக், ஹைப்பர்சோனிக் ஏவுகணை தொடர்பான ரகசிய தகவல்களை கசியவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது குறித்த ரகசியங்களை சில விஞ்ஞானிகள் வெளிநாடுகளுக்கு விற்பதாக அரசுக்கு சந்தேகம் எழுந்தது. இந்நிலையில் சீனாவின் பாதுகாப்புச் சேவைகளுடன் ஒத்துழைத்த குற்றச்சாட்டில் விஞ்ஞானி டிமிட்ரி கோல்கர் என்பவர் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் உயிரிழந்துள்ளார். இதை தொடர்ந்து, ஏவுகணைகள் தொடர்பான மாநில ரகசிய தரவை மாற்றியதாக அந்நிறுவனத்தின் தலைமை ஆராய்ச்சியாளர் அனடோலி மஸ்லோவ் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement