அலரி மாளிகை சொத்துக்களை சேதப்படுத்திய சந்தேக ஒருவர் நபர் கைது

கடந்த ஜூலை மாதம் 9 ஆம் திகதி அலரி மாளிகைக்குள் நுழைந்து அங்குள்ள சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர் ஒருவர் கொழும்பு தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் பம்பலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்கு உற்பட்ட ஆதிமலை தெருவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 53 வயதுடைய கொழும்பு-03 பகுதியைச் சேர்ந்தவர். சந்தேகநபர் கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், கொழும்பு தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.