17 ஆயிரம் அடி உயரத்தில் பறந்த தேசியக்கொடி| Dinamalar

புதுடில்லி :ஐ.டி.பி.பி., எனப்படும் இந்தோ- – திபெத் எல்லை காவல் படையின் வீராங்கனையர், -சீன எல்லை பகுதியில் இமயமலையில் கடல் மட்டத்தில் இருந்து 17 ஆயிரம் அடி உயரத்தில் தேசியக் கொடியை ஏற்றி நேற்று சாதனை படைத்தனர்.
நாட்டின் 75-வது சுதந்திர ஆண்டு, ‘ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்’ என்ற பெயரில் நாடு முழுக்க கொண்டாடப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, வரும் 13 முதல் 15 வரை, ‘ஒவ்வொரு வீட்டிலும் தேசியக் கொடி பறக்க விடப்பட வேண்டும்’ என்ற பிரசாரத்தை மத்திய
அரசு நடத்தி வருகிறது.இந்நிலையில், ஐ.டி.பி.பி.,யின் வீராங்கனையர், உத்தரகண்ட் மாநிலம் அருகே சீன எல்லையில், இமயமலையில் கடல் மட்டத்தில் இருந்து 17 ஆயிரம் அடி உயரத்தில் தேசியக் கொடியை ஏற்றி நேற்று சாதனை படைத்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.