கிரீஸில் அகதிகள் படகு மூழ்கியதில் பலர் மாயம்| Dinamalar

ஏதென்ஸ்:அகதிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று, தென்கிழக்கு ஐரோப்பிய நாடான கிரீஸ் அருகே கடலில் மூழ்கியதில் பலர் மாயமாகினர்; 29 பேர் மீட்கப்பட்டனர்

சிரியா, லிபியா ஆகிய நாடுகளில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு போர் காரணமாக, அங்கிருந்து பலர் புகலிடம் தேடி ஐரோப்பிய நாடுகளுக்கு செல்கின்றனர். அதற்காக, அவர்கள் சட்டவிரோதமாக கடத்தல்காரர்கள் உதவியுடன் படகுகளில் செல்கிறார்கள்.

இதுபோல, 80 அகதிகளை ஏற்றிக்கொண்டு, படகு ஒன்று துருக்கி, கிரீஸ் கடல் மார்க்கமாக இத்தாலி நோக்கி புறப்பட்டது. ஆனால், கடல் சீற்றம், பேரலை காரணமாக அந்த படகு, கிரீஸின் கர்பதோஸ் தீவு அருகே நேற்று முன்தினம் இரவு கடலில் கவிழ்ந்தது.

இதில் தத்தளித்த 29 பேரை கிரீஸ் கடற்படையினர் மீட்டனர். மற்றவர்களை தேடும் பணி நடைபெறுகிறது. இது குறித்து, கிரீஸ் கடலோர காவல் படை அதிகாரி கூறியதாவது:இந்த விபத்தில் மாயமானவர்களை, மூன்று கடற்படை கப்பல்கள், ஹெலிகாப்டர் உதவியுடன் தேடும் பணியில் ஈடுபட்டிருக்கிறோம். மீட்கப்பட்டவர்கள் ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் ஈரானைச் சேர்ந்தவர்கள். இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.