சிதம்பரம் நடராஜர் கோயிலில் நகை சரிபார்ப்பு ஆய்வு தொடக்கம்..!!

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் 17 ஆண்டுகளுக்கு பிறகு இன்று நகைகள் சரிபார்க்கும் பணிகள் தொடங்கியது. சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள நகைகளை சரிபார்ப்பதற்கு கடந்த ஜூலை மாதம் 25ம் தேதி ஆய்வுக்கு வருவதாக தீட்சிதர்களுக்கு இந்துசமய அறநிலையத்துறை கடிதம் அனுப்பியது. ஆனால் அதற்கு தீட்சிதர்கள் அனுப்பிய பதில் கடிதத்தில், நகை பாதுகாப்பு குழுவில் உள்ள சிலர் வடமாநிலங்களில் ஆன்மிக நிகழ்ச்சிகளில் இருப்பதால் ஆகஸ்ட் மாதம் 2வது வாரத்திற்கு பிறகு வருமாறு தெரிவித்திருந்தனர். அதன்படி இன்று இந்துசமய அறநிலையத்துறையின் 3 துணை ஆணையர்கள் மற்றும் 3 நகை மதிப்பீட்டு வல்லுநர்கள் என 6 பேர் கொண்ட குழுவினர் நகை சரிபார்ப்பு பணியில் இன்று ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய தீட்சிதர்களின் வழக்கறிஞர் சந்திரசேகர் நம்பகத்தன்மையையும், வெளிப்பாடு தன்மையையும் நிரூபிக்கவே நகை சரிபார்ப்புக்கு ஒத்துழைப்பு அளிப்பதாக தெரிவித்தார். தொடர்ந்து நடராஜர் கோவில் பற்றி பொதுவெளியில் பல்வேறு தவறான தகவல்கள் பரப்பப்படுவதாக வழக்கறிஞர் சந்திரசேகர் தெரிவித்தார். இதைத்தடுக்க வரும் காலங்களில் அனைத்து  கணக்குகளும் தாங்களே ஆடிட்டிங் செய்து ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவர் மூலம் அவற்றை சரிப்பார்த்து வெளியிட முடிவு செய்திருப்பதாக அவர் தெரிவித்தார்   

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.