’எங்களையா ஈவ்டீஸிங் பண்ற’.. போதையில் ஓட்டுநரையும் ஆட்டோவையும் அடித்து நொறுக்கிய பெண்கள்!

குவாலியரில் Eve teasing எனக் கூறிக்கொண்டு குடிபோதையில் ஆட்டோ ஓட்டுநரை அடித்ததோடு ஆட்டோவை தாக்கிய பெண்கள்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் செண்ட்ரல் பார்க் ஹோட்டல் சிட்டி சென்டரில் ஆகஸ்ட் 21ஆம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது. ஆக்டிவா இருசக்கர வாகனத்தில் சென்ற இரண்டு பெண்கள் திடீரென வாகனத்தை நிறுத்தி அருகே வந்துகொண்டிருந்த ஆட்டோ ஓட்டுநரை அடித்து, ஆட்டோவையும் தாக்கினார். இந்த வீடியோ இணையங்களில் பரவி வைரலானது.

After Noida, meet another Karen from Gwalior, MP.

Drunk lady verbally abuses auto drivers, manhandles them for alleged eve-teasing.

Police apparently, didn’t act against the lady and let her go. pic.twitter.com/ljC7IKUtXH
— a.s.chakravarty (@ajeetkcs) August 22, 2022

அந்த வீடியோவில் ஆட்டோ ஓட்டுநர் தங்கள் இருசக்கர வாகனத்தை தவறாக முந்திச் சென்றதாக பெண்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதையடுத்து ஆட்டோவை நிறுத்தி அதை ஒரு பெண் அடித்து நொறுக்குகிறார். தொடர்ந்து ஆட்டோ ஓட்டுநரையும் அடித்து தகாத வார்த்தைகளால் திட்டுகின்றனர். இதனைப் பார்த்த சக வாகன ஓட்டிகள் சண்டையை விலக்க முற்படுவதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
இதனையடுத்து தற்போது அந்த பெண்ணின் மீது இந்திய சட்டப்பிரிவுகளான 323, 503இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.