பத்து மொழிகளில் வெளியாகும் சூர்யாவின் 42வது படம்

பாலா இயக்கும் வணங்கான் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பில் நடித்து முடித்துள்ள சூர்யா, தற்போது சிவா இயக்கும் தனது 42வது படத்தில் நடிக்க தொடங்கி விட்டார். இந்த படத்தின் பூஜை நேற்று நடைபெற்ற நிலையில் இன்று சென்னையில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. கோவாவில் அடுத்த கட்ட படப்பிடிப்பு நடைபெற உள்ளது. அதோடு அடுத்த வாரத்தில் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் டைட்டில் வெளியாக உள்ளதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

யுவி கிரியேஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்த படத்தில் சூர்யாக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார். அந்த வகையில் சூர்யாவும் , சிறுத்தை சிவாவும் இருக்கிற வேகத்தை பார்க்கும்போது பாலா இயக்கும் வணங்கான் படத்தை முந்திக்கொண்டு இப்படம் திரைக்கு வந்துவிடும் போல் தெரிகிறது. இதற்கெல்லாம் மேலாக, சூர்யா 42 வது படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, மராத்தி, பெங்காலி என பத்து மொழிகளில் வெளியிடவும் திட்டமிடப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.