ஆசிரியை வங்கி கணக்கில் ரூ.21 லட்சம் அபேஸ்..! – வாட்சாப் மூலம் நடந்த மோசடி..!

பல்வேறு காலகட்டங்களில் திருட்டுகள் நூதனமாக நடந்து கொண்டு தான் உள்ளன. இந்த காலத்தில் தொழில்நுட்பத்திலும் திருட்டுகள் அதிகரித்துள்ளன. செல்போனுக்கு தொடர்பு கொண்டு ஏடிஎம் பின் கேட்பது போன்ற திருட்டுகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் ஆந்திர பிரதேசத்தின் அன்னமய்யா மாவட்டத்தில் மதனபள்ளி நகரில் ரெட்டப்பநாயுடு காலனியில் வசித்து வருபவர் வரலட்சுமி. ஓய்வு பெற்ற ஆசிரியை. இவரது வாட்ஸ்அப் எண்ணுக்கு தகவல் ஒன்று வந்துள்ளது. அதனுடன் லிங்க் ஒன்றும் இருந்துள்ளது. அந்த லிங்க்-கை ஆசிரியை திறந்து பார்த்துள்ளார். இதன் தொடர்ச்சியாக, அவரது மொபைல் போனை ஹேக் செய்திருந்த நபர், தொடர்ச்சியாக அவரது வங்கி கணக்கில் இருந்து பல முறை பணம் பரிமாற்றம் செய்துள்ளார். தொடக்கத்தில் ரூ.20 ஆயிரம், ரூ.40 ஆயிரம் மற்றும் ரூ.80 ஆயிரம் என பணம் எடுக்கப்பட்டு உள்ளது. இதன்படி மொத்தம் ரூ.21 லட்சம் வரை பணம் எடுக்கப்பட்டு உள்ளது. இதுபற்றி இணையதள குற்ற பிரிவு போலீசாருக்கு வரலட்சுமி புகார் அளித்து உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.