சனிக்கிழமை பள்ளிகள் செயல்படும் – பள்ளிக்கல்வித்துறை உத்தரவு..!

தமிழகத்தில் கடந்த 28.7.2022 முதல் 10.8.2022 வரை 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் சிறப்பாக நடந்து முடிந்தது. முன்னதாக செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு சர்வதேச செஸ் விளையாட்டு வீரர்கள் வருகை குறித்த விவரங்கள், விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு

பணிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், தங்குமிட வசதிகள், தொடக்க விழா மற்றும் நிறைவு விழா ஏற்பாடுகள், அழைக்கப்படும் முக்கிய அழைப்பாளர்கள், விழிப்புணர்வு நடவடிக்கைகள், செஸ் ஒலிம்பியாட் தீபம் உள்ளிட்டவை குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது.

அதன் பிறகு, செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு 28.7.2022 அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த விடுமுறையை ஈடுகட்டும் வகையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் வரும் ஆகஸ்ட் 27ம் தேதி ( சனிக்கிழமை ) பள்ளிகள் செயல்படும் என அரசு தகவல் வெளியிட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.