மதுரை: தாயென நினைத்து மற்றொரு மாட்டிடம் பால் குடித்த கன்றை அடித்துக் கொன்ற கொடூரம்

மதுரையில் தான் வளர்க்கும் பசு மாட்டிடம் மற்றொருவரின் கன்றுக் குட்டி பால் குடித்ததாகக் கூறி 7மாத பசுங்கன்றுக் குட்டியை அடித்துகொன்ற கொடூரம் – சிசிடிவி காட்சி அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மதுரை மாநகர் கிழக்குவெளி வீதியைச் சேர்ந்த சிக்கந்தர் சேக்அப்துல்லா என்பவர் மாவட்ட நீதிமன்றத்தில் குமாஸ்தவாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், ஆடு, மாடுகளை வளர்ப்பதில் ஆர்வம் கொண்ட இவர், வைகை ஆற்றின் தென்கரை பகுதியில் 7 மாத கன்றுடன் மாடு ஒன்றை வளர்த்து வந்துள்ளார்.
image
இந்நிலையில் இவர், வளர்த்து வந்த 7மாத பசுங்கன்றுக் குட்டி கடுமையாக தாக்கப்பட்ட நிலையில் உயிரிழந்து கிடந்துள்ளது. இது குறித்து அருகில் இருந்தவர்களிடம் விசாரித்துள்ளார். அப்போது நெல்பேட்டை பகுதியைச் சேர்ந்த காதர் சுல்தான் (65) என்ற முதியவர், தான் வளர்த்துவரும் பசு மாட்டிடம் நீங்கள் வளர்க்கும் பசுங்கன்று தினசரி வந்து பால் குடித்துவிட்டு சென்றதால் அடித்துக் கொலை செய்ததாக கூறியுள்ளனர்.
image
இதனையடுத்து சேக் அப்துல்லா விளக்குத்தூண் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விலங்குகள் துன்புறுத்தல் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் காதர் சுல்தானை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.