இந்தியாவில் ,புதிதாக 10,649 பேருக்கு கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10,649 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் இன்று மீண்டும் 10 ஆயிரத்திற்கு மேல் பதிவாகியுள்ளது.
இது தொடர்பாக இந்திய மத்திய சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில்
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10 ஆயிரத்து 649 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது.

இதன் மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4 கோடியே 43 இலட்சத்து 68 ஆயிரத்து 195 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 36 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 27 ஆயிரத்து 452 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 10 ஆயிரத்து 677 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 37 இலட்சத்து 44 ஆயிரத்து 301 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 96 ஆயிரத்து 442 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று இந்திய மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.