புதுடில்லி: என்டிடிவி பங்குகளை, அதானி நிறுவனம் வாங்கியது தொடர்பாக, தங்களுக்கு எந்த தகவல் தெரிவிக்கப்படாமலும், ஒப்புதல் பெறாமலும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக என்டிடிவி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
என்டிடிவி செய்தி நிறுவனத்தின் 29.18 சதவீத பங்குகளை அதானி குழுமம் கையகப்படுத்தியுள்ளது. இந்த பங்குகள் மூன்றில் ஒரு பங்கு. இதனால், என்டிடிவி நிர்வாக முடிவுகளை எடுக்கக்கூடிய பங்குதாரராகவும் அதானி குழுமம் செயல்படும் அந்தஸ்தை பெற்றுள்ளது.
இது தொடர்பாக என்டிடிவி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: என்டிடிவி எப்போதும் அதன் செயல்பாட்டில் அதன் இதழியலில் சமரசம் செய்ததில்லை. நாங்கள் எங்கள் பாணி இதழியலை பெருமிதத்துடன் தொடர்கிறோம். இந்த மொத்த பரிவர்த்தனையும் எவ்வித ஆலோசனையும் இல்லாமல், தகவலும் தெரிவிக்கப்பலாமல், ஒப்புதல் பெறாமலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
புதுடில்லி: என்டிடிவி பங்குகளை, அதானி நிறுவனம் வாங்கியது தொடர்பாக, தங்களுக்கு எந்த தகவல் தெரிவிக்கப்படாமலும், ஒப்புதல் பெறாமலும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக என்டிடிவி உரிமையாளர்கள்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்