ஹைதராபாத்:
தெலுங்கு
–
இந்தி
பைலிங்குவலாக
பெரும்
பொருட்செலவில்
உருவான
விஜய்
தேவரகொண்டாவின்
லைகர்
திரைப்படம்
படுதோல்வியை
சந்தித்தது.
விஜய்
தேவரகொண்டா,
அனன்யா
பாண்டேவை
தாண்டி
நெட்டிசன்கள்
பலரும்
அந்த
படத்தை
தயாரித்த
நடிகை
சார்மியை
பயங்கரமாக
ட்ரோல்
செய்துள்ளனர்.
இதனால்
கடுப்பான
நடிகை
சார்மி
சமூக
வலைதளங்களில்
இருந்து
பிரேக்
எடுத்துக்
கொள்வதாக
பரபரப்பு
ட்வீட்
போட்டுள்ளார்.
தயாரிப்பாளரான
சார்மி
சிம்புவின்
காதல்
அழிவதில்லை
படத்தின்
மூலம்
கடந்த
2002ம்
ஆண்டு
தமிழ்
சினிமாவில்
ஹீரோயினாக
அறிமுகமானவர்
நடிகை
சார்மி.
காதல்
கிசுகிசு,
ஆஹா
எத்தனை
அழகு,
லாடம்,
சியான்
விக்ரமின்
பத்து
என்றதுக்குள்ள
(ஒரு
பாடலுக்கு
நடனம்)
உள்ளிட்ட
தமிழ்
படங்களில்
நடித்த
சார்மி
தெலுங்கு
மற்றும்
மலையாள
படங்களில்
நடித்துள்ளார்.
கடந்த
2015ம்
ஆண்டு
ஜோதி
லக்ஷ்மி
எனும்
படத்தை
தயாரிக்க
தொடங்கிய
சார்மி
லைகர்
படம்
வரை
ஏகப்பட்ட
படங்களை
தயாரித்து
வருகிறார்.

ஒரே
இயக்குநர்
இணை
தயாரிப்பாளராக
சார்மி
பணியாற்றிய
அத்தனை
படங்களையும்
இயக்குநர்
பூரி
ஜெகநாத்
தான்
இயக்கி
உள்ளார்
என்பது
கூடுதல்
தகவல்.
இந்நிலையில்,
அதே
கூட்டணியில்
விஜய்
தேவரகொண்டா,
அனன்யா
பாண்டே
மற்றும்
மைக்
டைசன்
நடிப்பில்
உருவான
லைகர்
திரைப்படம்
பெரும்
வெற்றியை
பெறும்
என
எதிர்பார்த்த
நிலையில்
படத்துக்கு
டிசாஸ்டர்
ரிப்போர்ட்டுகள்
குவிந்தன.

சார்மியை
கலாய்த்த
ரசிகர்கள்
விஜய்
தேவரகொண்டாவின்
ஓவர்
பில்டப்
செய்யப்பட்ட
லைகர்
திரைப்படம்
ஃபிளாப்
ஆன
நிலையில்,
விஜய்
தேவரகொண்டா
மற்றும்
அனன்யா
பாண்டேவை
தாண்டி
அந்த
படத்தின்
இணை
தயாரிப்பாளர்
சார்மியையும்
டோலிவுட்
ரசிகர்கள்
பயங்கரமாக
ட்ரோல்
செய்து
கலாய்த்து
வந்தனர்.
இந்நிலையில்,
அதையெல்லாம்
தாங்கிக்
கொள்ள
முடியாமல்
சோஷியல்
மீடியாவில்
இருந்து
பிரேக்
எடுத்துக்
கொள்ளப்
போவதாக
அறிவித்துள்ளார்.

சோஷியல்
மீடியாவுக்கு
பிரேக்
நடிகை
சார்மி
அதிகார்ப்பூர்வமாக
ட்வீட்
போட்டு,
சில்
கய்ஸ்,
நானும்
பூரி
ஜெகநாத்தும்
இதை
விட
பலமாக
திரும்பி
வருவோம்
வாழுங்கள்..
வாழ
விடுங்கள்
என
ட்வீட்
போட்டுள்ளார்.
அவரது
ட்வீட்டுக்கு
கீழ்
ஏகப்பட்ட
ரசிகர்கள்
இதற்கெல்லாம்
நீங்க
ரியாக்ட்
பண்ண
வேண்டாம்,
பல
பெரிய
படங்கள்
பாய்காட்
செய்யப்பட்டுள்ளன.
பல
படங்கள்
ஃபிளாப்
ஆகி
உள்ளன.
தொடர்ந்து
நல்ல
படங்களை
கொடுங்க
என
ரசிகர்கள்
ஆதரவு
தெரிவித்து
வருகின்றனர்.

சமந்தாவை
போலவே
நடிகை
சமந்தா
சமீபத்தில்
இதே
போல
ட்ரோகளால்
கடுப்பாகி
சோஷியல்
மீடியாவில்
இருந்து
விலகி
உள்ளார்
என
பேச்சுக்கள்
கிளம்பிய
நிலையில்,
யசோதா
படத்தின்
டீசர்
வெளியீட்டு
தேதி
அறிவிப்பு
போஸ்டரை
மட்டும்
பதிவிட்டார்.
தொடர்ந்து
போட்டோஷூட்
புகைப்படங்களை
பதிவிட்டு
வந்த
அவர்
திடீரென
ஒரு
மாத
காலம்
ஏன்
சைலன்ட்
ஆகிவிட்டார்
என்கிற
கேள்விகளும்
கிளம்பின.
பிரபலங்கள்
சோஷியல்
மீடியா
மூலம்
ரசிகர்களுடன்
நேரடி
தொடர்பில்
இருப்பதில்
இப்படியொரு
நெகட்டிவிட்டி
சிக்கல்
இருப்பது
சமீப
காலமாக
எல்லை
மீறி
வருகிறது.
நயன்தாரா
உள்ளிட்ட
நடிகைகள்
அதன்
காரணமாகவே
சோஷியல்
மீடியாவை
விட்டு
ஒதுங்கியே
உள்ளனர்.