திருச்சி : விபசாரத்தில் ஈடுபட்டுவந்த கும்பலை கூண்டோடு போலீசார் கைது செய்துள்ளனர்.
கே.கே.நகர் கோவர்தன் கார்டன் பகுதி அருகே, சிலர் பெண்களை வைத்து விபசார தொழில் நடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில் திருச்சி விபசார தடுப்பு பிரிவு காவலர்கள் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது, ஐயப்பன் நகர் காமராஜர் தெருவை சேர்ந்த வைத்தியநாதன், அரியலூர் கூத்தூர் பகுதி மணிகண்டன் ஆகிய இருவரும் பெண்களை வைத்து விபசார தொழிலில் ஈடுபட்டது உறுதியானது.
மேலும், விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்த சினேகா (வயது 21), தேனி மயிலாடும்பாறை பகுதி பிரியா (வயது 24), நாமக்கல் ராசிபுரம் பகுதி சுதா (33) ஆகிய 3 பெண்களை போலீசார் மீட்டனர்.
போலீசாரால் கைது செய்யப்பட்ட வைத்தியநாதன் மீது ஏற்கனவே மூன்று காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது போலீசார் விசாரணையில் தெரிவந்துள்ளது.
தொடர்ந்து கைதான வைத்தியநாதன், மணிகண்டன் ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.