சென்னை:
செல்வராகவன்
இயக்கத்தில்
தனுஷ்
நடித்துள்ள
நானே
வருவேன்
திரைப்படம்
வரும்
செப்டம்பர்
29ம்
தேதி
வெளியாக
உள்ளதாக
தகவல்கள்
வெளியாகி
உள்ளன.
தமிழ்
சினிமாவின்
பிரம்மாண்ட
படமாக
பார்க்கப்படும்
பொன்னியின்
செல்வன்
வெளியாகும்
ஒரு
நாள்
முன்பாக
அந்த
படம்
வெளியாவது
ஏன்?
என்கிற
கேள்விகளும்
கிளம்பி
உள்ளன.
கேஜிஎஃப்
எனும்
பெரிய
படத்துடன்
விஜய்யின்
பீஸ்ட்
வெளியானதை
போல
இந்த
படமும்
அடி
வாங்கி
விடப்
போகுது
என்றும்
ட்ரோல்கள்
பறக்கின்றன.
கடைசி
நேரத்தில்
பொன்னியின்
செல்வன்
வெளியீடு
குறித்த
அறிவிப்பு
எப்பவோ
அறிவிக்கப்பட்டு
வியாபாரங்கள்
நடைபெற்றுள்ளன.
ஆனால்,
கடைசி
நேரத்தில்
தனுஷின்
நானே
வருவேன்
படத்தை
போட்டிப்
படமாக
இயக்க
தயாரிப்பாளர்
கலைப்புலி
எஸ்.
தாணு
தீவிரம்
காட்டி
வருவது
ரசிகர்கள்
மத்தியிலும்
திரையுலகினர்
மத்தியிலும்
பெரும்
அதிருப்தியை
ஏற்படுத்தி
உள்ளது.

திருச்சிற்றம்பலம்
தந்த
வெற்றி
நடிகர்
தனுஷ்
நடிப்பில்
ஓடிடியில்
வெளியான
படங்கள்
தொடர்ந்து
தோல்வியை
சந்தித்த
நிலையில்,
சமீபத்தில்
சன்
பிக்சர்ஸ்
தயாரிப்பில்
மித்ரன்
ஆர்
ஜவஹர்
இயக்கத்தில்
தியேட்டரில்
வெளியான
திருச்சிற்றம்பலம்
திரைப்படம்
100
கோடி
வசூலை
கடந்து
ஹிட்
அடித்தது.
அந்த
படம்
கொடுத்த
நம்பிக்கை
தான்
அதிரடியாக
தனுஷின்
இன்னொரு
படத்தையும்
இறக்கி
வசூல்
செய்ய
முடிவு
செய்துள்ளனர்
என்கின்றனர்.

செல்வராகவன்
இப்படி
செய்யலாமா
ஆயிரத்தில்
ஒருவன்,
இரண்டாம்
உலகம்
உள்ளிட்ட
படங்களை
இயக்கிய
இயக்குநர்
செல்வராகவனுக்கு
பிரம்மாண்ட
வரலாற்று
படம்
எவ்வளவு
உழைப்பை
அள்ளியிருக்கும்
என்று
நன்றாகவே
தெரிந்திருக்கும்,
இருந்தும்
இப்படியொரு
கிளாஷுக்கு
ஏன்
ரெடியானார்
என்கிற
கேள்வியை
ரசிகர்கள்
எழுப்பி
வருகின்றனர்.

பீஸ்ட்
பண்ண
அதே
தப்பு
மேலும்,
கேஜிஎஃப்
2
எனும்
பிரம்மாண்ட
படத்துடன்
விஜய்யின்
பீஸ்ட்
படத்தை
ஒன்றாக
வெளியிட்டது
தான்
அந்த
படம்
சொதப்ப
காரணம்
என்றும்
பேச்சுக்கள்
எழுந்து
வந்த
நிலையில்,
பொன்னியின்
செல்வன்
படத்துடன்
மோதினால்
நானே
வருவேன்
படத்துக்கும்
இதே
நிலைமை
தான்
என்றும்
பொன்னியின்
செல்வன்
ரசிகர்கள்
எச்சரித்து
வருகின்றனர்.

பெரிய
நம்பிக்கை
பொன்னியின்
செல்வன்
படத்துடனே
நம்ம
படத்தை
வெளியீட்டு
பாக்ஸ்
ஆபிஸ்
ஹிட்
அடிக்க
வைக்கலாம்
என்கிற
நம்பிக்கை
நடிகர்
தனுஷுக்கு
இருக்கும்
அளவுக்கு
படம்
தரமாக
வந்துள்ளதா?
செல்வராகவன்
மீண்டும்
தனது
மேஜிக்கை
நீண்ட
காலம்
கழித்து
செய்வாரா
இந்த
படத்தில்
அவரும்
நடித்துள்ளாரே
என
ஏகப்பட்ட
விவாதங்கள்
சமூக
வலைதளங்களில்
டிரெண்டாகி
வருகின்றன.

முடிவு
விரைவில்
பொன்னியின்
செல்வன்
படத்துக்கு
போட்டியாக
வெளியானாலும்,
நம்ம
படம்
பந்தயம்
அடிக்கும்
என்கிற
நம்பிக்கையுடன்
தனுஷ்
களமிறங்கி
உள்ள
நிலையில்,
அதன்
முடிவு
வெற்றியா?
தோல்வியா?
என்பது
விரைவில்
தெரிந்து
விடும்
என்றும்
தொடர்ந்து
தனுஷை
வெள்ளித்திரையில்
காண்பதே
தனிச்
சிறப்பு
தான்
என
ரசிகர்கள்
எதிர்பார்ப்புகளுடன்
காத்திருக்கின்றனர்.