மதம் மாறினால் ஜாதி சான்றிதழ் செல்லாது..! – தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணை தலைவர் அறிவிப்பால் அதிர்ச்சி..!

மதம்மாறினால் ஜாதி சான்றிதழ் செல்லாது என தாழ்த்தப்பட்டோர்ஆணைய துணை தலைவர் அருண் ஹால்தார் அறிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியைஏற்படுத்தியுள்ளது. மதம்மாறிய பட்டியலின வகுப்பை சேர்ந்தவர்களுக்கு எஸ்.சி. ஜாதி சான்று செல்லாது.அதனையும்மீறி வழங்கினால் அது போலி சான்றிதழ் என தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணை தலைவர் அருண்ஹால்தார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஜாதிகளை வகுப்பு வாரியாக பிரித்து பிறப்படுத்தபட்ட வகுப்பினர் , மிகவும் பிற்படுத்தபட்ட வகுப்பினர் , தாழ்த்தப்பட்டோர், இதர வகுப்பினர் என வகைப்படுத்தி அவர்களுக்கான இட ஒதுக்கீட்டை அரசு வழங்கி வருகிறது. குறிப்பாக தாழ்த்தப்பட்டோர் எனும் பிரிவுக்கு அரசு அவர்கள் வாழ்வு மேம்பட பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் இந்த இடஒதுக்கீடு குறித்து இன்று தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணை தலைவர் அருண் ஹால்தார்ஓர் முக்கிய தகவலை குறிப்பிட்டார்.
அதாவது பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர்கள் மதம் மாறினால், அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள எஸ்,சி சான்று செல்லாது. அல்லது மதம் மாறிய பின்னர் எஸ்.சி சாதி சான்று வழங்கப்பட்டால் அது போலி சான்றிதழ் என தெரிவித்தார் தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணை தலைவர் அருண் ஹால்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.