மொத்தமாக இறந்துகிடந்த ஆடுகள்.. வெறிநாய் கடியால் நிகழ்ந்த கொடூரம் – விவசாயி வேதனை!

உச்சிப்புளி அருகே வெறிநாய் கடித்ததில் 32 ஆடுகள் உயிரிழந்தன. 
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அடுத்த கல்கிணற்று வலசை சேர்ந்த அர்ஜுன் என்பவர் 50-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வந்தார். இந்த நிலையில் ஆடுகளை தொழுவத்தில் அடைத்து விட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டு இன்று காலை திரும்பி வந்துள்ளார். அப்போது அங்கு சென்று பார்த்தபோது நான்கு வெறிநாய்கள் கடித்ததில் 32 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்து கிடந்தன.
image
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி கால்நடை மருத்துவரை வரவழைத்து ஆய்வு செய்து வருகின்றனர். நேற்று இதே பகுதியில் வெறிநாய் கடித்ததில் நல்லமுத்து என்பவருக்குச் சொந்தமான 20 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
image
வெறிநாயின் கடித்து 32 ஆடுகள் உயிரிழந்ததால் விவசாயி கவலை அடைந்துள்ளார். இதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வெறிநாய்களை பிடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.