ராகுல் காந்தியின் தேச ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்க இயலவில்லை..! – சோனியா காந்தி கூறும் காரணம்..!

மருத்துவ பரிசோதனை காரணமாக தேச ஒற்றுமை யாத்திரை தொடக்க விழாவில் பங்கேற்க இயலவில்லை என சோனியா காந்தி கூறியுள்ளார்.

கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து பாதயாத்திரையை இன்று தொடங்குகிறார்.

இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தவும் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை `பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற பெயரில் நடைபயணம் மேற்கொள்கிறார். கன்னியாகுமரியில் பாதயாத்திரை தொடங்கும், ராகுல் காந்தி 12 மாநிலங்கள் 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக மொத்தம் 150 நாட்கள் 3,500 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று காஷ்மீரை அடைகிறார்.

காங்கிரஸ் கட்சியின் ‘இந்திய ஒற்றுமை பயணம்’ இன்று பல்வேறு தமிழக அரசியல் தலைவர்கள் முன்னிலையில் இன்று துவங்கியது. நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தி உள்பட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை தொடக்கத்தை முன்னிட்டு தேசிய கொடியை ராகுல் காந்தியிடம் கொடுத்து யாத்திரையை தொடங்கி வைத்தார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

அதற்கு முன்பாக ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பேரணியாக காந்தி மண்டபத்தில் இருந்து, நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு நடந்து சென்றனர். ராகுல் காந்தி தலைமையில் நடைபெறும் தேச ஒற்றுமை யாத்திரை வெற்றி பெற காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார் . மருத்துவ பரிசோதனை காரணமாக யாத்திரை தொடக்க விழாவில் பங்கேற்க இயலவில்லை எனவும் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி மேற்கொள்ள உள்ள இந்த தேச ஒற்றுமை யாத்திரை இந்திய அரசியலில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.