ராகுல் காந்தியின் 2ம் நாள் பயணம்..! – எந்த வழித்தடத்தில் பயணிக்கிறார் தெரியுமா..?

தலைவர் ராகுல் காந்தி இரண்டாவது நாள் நடை பயணமாக நாளை அகஸ்தீஸ்வரத்தில் இருந்து துவங்கி நாகர்கோயிலில் நிறைவு செய்கிறார். இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தவும் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை `பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற பெயரில் நடைபயணம் மேற்கொள்கிறார்.

கன்னியாகுமரியில் பாதயாத்திரை தொடங்கும், ராகுல் காந்தி 12 மாநிலங்கள் 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக மொத்தம் 150 நாட்கள் 3,500 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று காஷ்மீரை அடைகிறார். காங்கிரஸ் கட்சியின் ‘இந்திய ஒற்றுமை பயணம்’ இன்று பல்வேறு தமிழக அரசியல் தலைவர்கள் முன்னிலையில் இன்று துவங்கியது. நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தி உள்பட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரண்டாவது நாள் நடை பயணமாக நாளை அகஸ்தீஸ்வரத்தில் இருந்து துவங்கி நாகர்கோயிலில் நிறைவு செய்கிறார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 151 நாட்கள் 3 ஆயிரத்து 571 கிலோமீட்டர் தூரம் நடை பயணம் மேற்கொள்கிறார். முதல் நாள் கன்னியாகுமரியில் இருந்து துவங்கிய நடைபயணம் 600 மீட்டர் தூரம் சென்ற நிலையில், இரண்டாவது நாள் நடை பயணம் அகஸ்தீஸ்வரத்தில் இருந்து புறப்படுகிறது.அங்கு இருந்து கொட்டாரம் வழியாக மதியம் சுசீந்திரத்திற்கு செல்கிறது.

அங்குமதிய இடைவேளைக்குப் பின்பு, மாலையில் புறப்பட்டு இடலாக்குடி வழியாக இரவில் கோட்டார் சந்திப்பில் நிறைவடைகிறது.நாளை இரவு ஸ்காட் கல்லூரி வளாகத்தில் தங்கும் அவர், நாளை மறுநாள் காலை அங்கிருந்து புறப்பட்டு தக்கலை வழியாக முளகுமூடு நோக்கி நடை பயணம் மேற்கொள்கிறார்.பத்தாம் தேதி இரவு தமிழக கேரள எல்லையான செறுவாரக் கோணத்தில் நிறைவடையும் நடை பயணம் பதினொன்றாம் தேதியிலிருந்து நடைபயணம் கேரளாவிற்குள்நுழைகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.