வாயால் சிக்கிய சி.வி.சண்முகம்; அதிமுகவில் உச்சகட்ட..பரபரப்பு!

தமிழகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர், ஒருங்கிணைப்பாளர்

, இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அதிமுகவை வழிநடத்தி வந்தனர்.

இந்த நிலையில் அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்து பேச்சு எழுந்ததால் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் தங்களது ஆதரவாளர்களுடன் தனித்தனி அணியாக இயங்கி வருகின்றனர்.

இதற்கிடையே தனது ஆதரவாளர்களை வைத்துக்கொண்டு, எடப்பாடி பழனிசாமி கடந்த 11ம் தேதி அதிமுக பொதுக்குழுவை கூட்டி, அதில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தன்னை அறிவித்து தீர்மானம் நிறைவேற்ற செய்தார்.

சென்னை வானகரம் தனியார் திருமண மண்டபத்தில் பொதுக்குழு கூட்டம் நடந்து கொண்டு இருந்த அதே சமயம், அதிமுக தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர் மாளிகைக்கு ஓ.பன்னீர்செல்வம் தொண்டர்கள் புடை சூழ வருகை தந்தார்.

அப்போது எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் திடீரென ஓபிஎஸ்சுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இருதரப்பினர் இடையே தள்ளுமுள்ளு, கல் வீச்சு சம்பவங்கள் நிகழ்ந்தன.

இதற்கிடையே இழுத்து சாத்தப்பட்டு இருந்த அதிமுக தலைமை அலுவலகத்தின் பூட்டை உடைத்துவிட்டு ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு அங்கிருந்த அதிமுகவினர் வழி ஏற்படுத்தினர்.

இதைத்தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுக அலுவலகத்தின் மாடி பகுதிக்கு சென்று சிறிது நேரம் சுற்றிப்பார்த்துவிட்டு மேலே இருந்து தொண்டர்களை பார்த்து கை அசைத்து திரும்பினர்.

இந்த சம்பவம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மீது முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் போலீசில் புகாரளித்தார். அந்த புகாரில் ஜெயலலிதாவுக்கு வந்த பல்வேறு பரிசு பொருட்கள் மற்றும் வெள்ளி வேல் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் காணவில்லை என, குறிப்பிட்டு இருந்தார்.

இதையடுத்து தமிழக வருவாய் துறை விரைந்து வந்து அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைத்தனர். இந்த சீலை அகற்றக்கோரி ஓபிஎஸ், இபிஎஸ் என இரு தரப்பினரும் உயர் நீதிமன்றத்தை நாடினர்.

முடிவில் எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் அதிமுக அலுவலகத்தின் சாவியை ஒப்படைக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கிடையே அதிமுக அலுவலக மோதல் வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக போலீஸ் டிஜிபி உத்தரவிட்டார்.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் நீதிமன்றத்தில் கூடுதல் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்டது தொடர்பான வழக்குகளை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றிய பிறகும் இதுவரை விசாரணை தொடங்கவில்லை என்றும், குற்றச்செயல் நடந்த இடத்திற்கு வந்து பார்வையிடாதது அதிர்ச்சி அளிப்பதாகவும் குற்றம்சாட்டி இருந்தார்.

அதோடு, செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், ‘காவல் துறை கோபாலபுரத்தில் மாவாட்டுகிறதா? என்றும், காவல் துறை ஸ்டாலின் வீட்டின் ஏவல் துறையாக உள்ளதாக சரமாரியாக விமர்சனம் செய்து இருந்தார்.

இந்நிலையில் இன்று, அதிமுக அலுவலகத்தில் சிபிசிஐடி போலீஸ் ஆய்வு செய்தது. அப்போது, தலைமை அலுவலகத்தில் காணாமல் போனதாக புகாரளிக்கப்பட்டு இருந்த வெள்ளி வேல் அதிமுக அலுவலகத்திலேயே இருப்பது உறுதி செய்யப்பட்டது.

மேலும், கடந்த ஜூலை 11ம் தேதி நடந்த வன்முறைக்கு பயன்படுத்தப்பட்ட எந்த ஆயுதங்களும் அதிமுக அலுவலகத்தில் இல்லை என்று சி.பி.சி.ஐ.டி போலீசார் கூறி இருப்பது அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் ‘வெள்ளி வேல்’ காணவில்லை என புகார் கூறி இருந்த நிலையில் வெள்ளி வேல் அங்கேயே இருப்பதை சிபிசிஐடி போலீஸ் பார்த்து டென்ஷன் ஆகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதன் தொடர்ச்சியாக, ‘காவல் துறை கோபாலபுரத்தில் மாவாட்டுகிறதா? காவல் துறை ஸ்டாலின் வீட்டின் ஏவல் துறையாக உள்ளது’ என்று ஏகத்துக்கும் சேற்றை வாரி இறைத்த சிவி சண்முகம் மீது, பொய் புகார் அளித்ததாக வழக்கு பதியலாமா? என்று காவல் துறை வட்டாரத்தில் ஆலோசனை நடத்துவதாக கூறப்படும் தகவல் அவருக்கு சிக்கலை உண்டாக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.