2023 ஆம் ஆண்டு தொடக்கம் புதிய கல்வி மறுசீரமைப்பின் கீழ்,தரம் 1 தொடக்கம் ஆங்கில மொழியை செயல்முறையில் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
கல்வி அமைச்சில் இதுதொடர்பாக அவர் தெரிவிக்கையில் பாடசாலை மாணவர்களின் ஆங்கில மொழி ஆற்றலை மேம்படுத்துவதற்காக கல்வி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
”English is simple” என்ற தலைப்பில் ஆங்கில மொழி ஆற்றலை மேம்படுத்துவதற்கான வேலைத் திட்டத்தில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.
இதற்கு மேலதிகமாக தரம் 6 தொடக்கம் கணிதம் மற்றும் விஞ்ஞானம் ஆகிய இரண்டு பாடங்களையும் ஆங்கில மொழியில் கற்பிப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இந்த பாடங்களில் பெரும்பாலான சொற்கள் தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்ட ஆங்கில மொழிக்கு அமைவாக அமைந்துள்ளது. இதனால் இதனை கற்றுக் கொள்வதில் சிரமம் இருக்காது என்றும் இவற்றை மாணவர்கள் எளிதில் கற்றுக் கொள்வார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இதனால் எந்த அநீதியும் ஏற்படாது என்றும் கல்வி அமைச்சர் கூறினார்.
கிராம புரங்களில் மாணவர்களின் பின்னடைவுக்கு ஒரு காரணம் விஞ்ஞானம் கணிதம் மற்றும் ஆங்கிலம் ஆகியவற்றை கற்பிக்கும் ஆசிரியர்களின் பற்றாக்குறைNa. ,jid நீக்கி ஆங்கில மொழி ஆற்றலை மாணவர்கள் பெறுவதற்கு தனியான வேலைத்திட்டம் தற்பொழுது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக கட்டமைப்பு கல்வித்துறை நிபுணர்களின் சேவை ஆசிரிய ஆலோசகர்களும் இதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அமைச்சர் மேலும் கூறினார்.
”English is simple” என்ற இந்த மேம்பாட்டு வேலைத்திட்டத்திற்கு அமைவாக பாடசாலை கற்கைநெறி அடிப்படையில் திறனை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட செயல்முறை கை நூல் மற்றும் இருவெட்டு நாட்டின் அனைத்து இரண்டாம் நிலை பாடசாலைகளுக்கு வழங்கப்படவுள்ளன.
அமைச்சின் E தொழில்நுட்ப இணையதளத்தில் அனைத்து மாணவர்களுக்கும் இந்த ஆங்கில மொழியாற்றல் கல்வியை பெற்றுக்கொள்ளமுடியும்