மனைவி, குழந்தையுடன் கான்ஸ்டபிள் தற்கொலை| Dinamalar

ஆமதாபாத் :கான்ஸ்டபிளுக்கும், அவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, இருவரும் தங்களது 3 வயது பெண் குழந்தையுடன் ௧௨வது மாடியிலிருந்து குதித்து நேற்று தற்கொலை செய்தனர். குஜராத்தின் ஆமதாபாதில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் ௧௨வது தளத்தில் கான்ஸ்டபிள் குல்திப்சின் யாதவ், தன் மனைவி மற்றும் 3 வயது பெண் குழந்தையுடன் வசித்து வந்தார். தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இருவரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால், இருவரும் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்து, தங்கள் குழந்தையுடன் நள்ளிரவு 1:30 மணியளவில் ௧௨வது மாடியிலிருந்து குதித்தனர். இதில், மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.இதே குடியிருப்பில் வசிக்கும் குல்திப்சின் யாதவின் சகோதரி, ‘கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் அவர்கள் இந்த முடிவுக்கு வந்திருக்கலாம்’ என தெரிவித்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.