ராகுல் காந்திக்கு வாழ்த்து தெரிவித்த புதுவை முக்கிய புள்ளிகள்..! – ராகுல் காந்தியுடன் சேர்ந்து பாதயாத்திரையில் பங்கேற்ப்பு..!

காங்கிரஸ் ராகுல் காந்தி தொடங்கிய ஒற்றுமை பாதயாத்திரையில் புதுச்சேரி முன்னாள் அமைச்சர் கந்தசாமி, முன்னாள் அரசு கொறடா அனந்தராமன் ஆகியோர் யாத்திரை வெற்றி பெற வாழ்த்து தெரிவித்து அவர்களோடு நடந்து சென்றனர்.

கன்னியாகுமரியிலிருந்து ஜம்மு, காஷ்மீருக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி ஒற்றுமை பாதயாத்திரையை தொடங்கினார். ராகுல்காந்தி கன்னியாகுமரி அகத்தீஸ்வரம் விவேகானந்தா கலைக்கல்லூரியில் இருந்து 2-ம் நாள் பாதயாத்திரையை தொடங்கினார்.

இதில் புதுவை முன்னாள் அமைச்சர் கந்தசாமி, முன்னாள் அரசு கொறடா அனந்தராமன் மற்றும் 3 பஸ்களில் சென்று 100-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்றனர். பாதயாத்திரையை தொடங்கிய ராகுல்காந்தி எம்.பி.யிடம், கந்தசாமி, அனந்தராமன் ஆகியோர் யாத்திரை வெற்றி பெற வாழ்த்து தெரிவித்து அவர்களோடு நடந்து சென்றனர்.

மாலை சுசீந்திரத்தில் இருந்து ராகுல்காந்தி பாதயாத்திரை தொடங்குகினார்ர். அதில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி பங்கேற்றுள்ளார். இதனிடையே புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் தலைமையில் வைத்திலிங்கம் எம்.பி. வைத்தியநாதன் எம்.எல்.ஏ, முன்னாள் எம்.எல்.ஏ, கார்த்திகேயன், சீனியர் துணைத்தலைவர் தேவதாஸ் மற்றும் 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கன்னியாகுமரி செல்கின்றனர். அவர்கள் ராகுல்காந்தி எம்.பி.யுடன் சேர்ந்து பாதயாத்திரையில் பங்கேற்கின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.