லக்னோவில் கனமழை காரணமாக சுவர் இடிந்து விழுந்ததில் 3 சிறுவர்கள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர்.
உத்தரப் பிரதேசம் மாநிலம் லக்னோவில் கடந்த சில நாட்களாக பலத்த மழை கொட்டி வருகிறது. இதனால் நகரின் பல பகுதிகளிலும் வெள்ளம் தேங்கி நிற்கிறது. இந்நிலையில் லக்னோவில் உள்ள தில்குஷா பகுதியில் கனமழை காரணமாக சுற்றுச்சுவர் இடிந்து குடிசைகள் மீது விழுந்தது. இந்த இடிபாடுகளில் சிக்கிய 3 சிறுவர்கள் உள்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இரண்டு பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் லக்னோ சிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்தை லக்னோ மாவட்ட ஆட்சித் தலைவர் ஸ்ரீ சூர்ய பால், நேரில் சென்று பார்வையிட்டார். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணத் தொகை வழங்க உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிக்க: இரண்டரை ஆண்டுகளுக்குப் பின் இந்தியா- பூடான் நுழைவு வாயில்கள் திறப்புSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM