
மதுரை பொன்மேனி எம்.எம்.நகரில் வசித்து வருபவர் முத்துக்குமார் (36). இவர் ஷேர் மார்க்கெட்டில் பணத்தை முதலீடு செய்துள்ளார். அதில் அவருக்கு 12 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. பணத்தை இழந்ததால் மனவருத்தத்துடன் அவர் இருந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் மது அருந்திய அவர் திடீரென்று அதிகாலை 4 மணிக்கு 3வது மாடிக்கு சென்றார். அங்கு திடீரென்று கழுத்தை கத்தியால் அறுத்து கொண்டு மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வெளியே வந்து பார்த்தனர். அப்போது ரத்த வெள்ளத்தில் முத்துக்குமார் இறந்து கிடப்பதை கண்டுஅதிர்ச்சி அடைந்தனர். பின்னர் எஸ்.எஸ்.காலனி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் முத்துக்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது தற்கொலை குறித்து வழக்குப் பதிவு செய்து விசரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.