கொழும்பிற்கும் அனுராதபுரத்திற்கும் இடையில் புதிய சொகுசு ரயில் சேவை

கொழும்பிற்கும் அனுராதபுரத்திற்கும் இடையில் புதிய சொகுசு ரயில் சேவை “ரஜரட்ட ஒடிஸி” இன்று (8) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

கொழும்பு கோட்டையிலிருந்து இந்த சொகுசு ரயில் காலை 9.20 மணிக்கு புறப்படும்

இந்த சொகுசு ரயில் கம்பஹா, வெயாங்கொடை மற்றும் பொல்கஹவெல நிலையங்களில் மாத்திரம் நிறுத்தப்படும். பிற்பகல் 1.00 மணியளவில் அனுராதபுரத்தை சென்றடையும்.

நாளை ஞாயிற்றுக்கிழமை (9) மாலை 5.00 மணிக்கு அநுராதபுரம் புகையிரத நிலையத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணத்தை ஆரம்பிக்கும் இந்த சொகுசு ரயில்   இரவு 10.00 மணிக்கு முன்னதாக கொழும்பு, கோட்டை புகையிரத நிலையத்தை சென்றடையும்.

இந்த ரயில் சேவை அனைத்து வார இறுதி நாட்களிலும் இடம்பெறும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.