வளர்ப்பு நாய் கொலை: ஹெச்.ராஜா மீது பாய்ந்த நடவடிக்கை!

பாஜக முன்னாள் தேசிய செயலாளரும், அக்கட்சியின் மூத்த தலைவருமான ஹெச்.ராஜா, சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். அவ்வப்பொது ஏதாவது கருத்துக்களை சொல்லி சர்ச்சையில் சிக்குவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

அந்த வகையில், கடந்த மாதம் 21ஆம் தேதி தனது வீட்டில் வளர்க்கப்பட்ட வளர்ப்பு நாயை கொன்றது பற்றி பதிவிட்டிருந்தார். அதில், “எங்கள் வீட்டில் அல்சேஷன் நாய் ஒன்றை பிரியமாக வளர்த்தோம். ஆனால், ஒருநாள் அதற்கு வெறி பிடித்து மாடு, கன்றுகளை கண்டிக்கத் துவங்கியது. நாய் பிடிப்பவரிடம் சொன்னோம். அவர் ஒரு கல்லு மூங்கிலால் அதன் மண்டையில் ஒரே போடு போட்டார். நாய் பரிதாபமாக இறந்தது. வருத்தமாக உள்ளது. என்ன செய்வது.” என ஹெச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

ஹெச்.ராஜா ட்வீட்

இதுதொடர்பாக, ஹெச்.ராஜா மீது புகார் அளிக்கப்பட்டது. ஸ்வப்னா சுந்தர் என்பவர் ஹெச்.ராஜாவின் மேற்கண்ட ட்விட்டர் பதிவை ஆதாரமாக கொண்டு அவர் மீது விலங்கு நல வாரியத்தில் புகார் அளித்தார். இந்த நிலையில், இந்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க சமர்ப்பிக்க சிவகங்கை மாவட்ட நிர்வாகத்திற்கு இந்திய விலங்குகள் நல வாரியம் உத்தரவிட்டுள்ளது.

மிருக வதை தடை சட்டம் 1960 பிரிவு 11 படி, தெருநாய் உட்பட எந்த விலங்கையும் துன்புறுத்துவது குற்றமாகும், இந்திய தண்டனை சட்டம் 429 படி, எந்த விலங்கையும் கொலை செய்தல், விஷம் கொடுத்தல் ஆகிய குற்றங்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கும் என தெரிவித்துள்ள இந்திய விலங்குகள் நல வாரியம், ஹெச்.ராஜா மீதான புகார் தொடர்பாக நடத்தி ஏழு நாட்களில் அறிக்கை சமர்ப்பிக்க சிவகங்கை மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.