காட்பாதர் வெற்றி – நயன்தாரா வெளியிட்ட அறிக்கை!

தெலுங்கில் காட்பாதர் படத்தை வெற்றி படமாக்கிய ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார் நயன்தாரா. அந்த அறிக்கையில், 'காட்பாதர் ஒரு மிகச்சிறந்த படம். சிரஞ்சீவி உடன் மீண்டும் நடிக்க கிடைத்த வாய்ப்பை பாக்கியமாக கருதுகிறேன். அவர் ஒரு வைரம் போன்றவர். எப்போதுமே உற்சாகமாக இருப்பார். படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் போது ஒவ்வொரு நொடியும் அருமையான நினைவாக அமைந்தது. அதோடு அனைவரும் ரசிக்கும் நடிகரான சல்மான்கான் இந்த படத்தில் நடித்ததால் இப்படம் மேலும் வலு பெற்றுள்ளது. அவருக்கு என்னுடைய நன்றி.

சத்ய தேவ், தான்யா போன்றவர்களும் சிறப்பாக நடித்துள்ளார்கள். இசையமைப்பாளர் தமன், கேமராமேன் நீரவ் ஷா ஆகியோர் தங்களது திறமையால் இந்த படத்தை வெற்றி பெற செய்துள்ளார்கள். ஆர்.பி.சவுத்ரி மற்றும் பிரசாத் ஆகியோர் இந்த படத்தை பிரமாண்டமாக விளம்பரம் செய்து வெற்றி பெற வைத்துள்ளார்கள். சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தினர் அனைவருக்கும் நன்றி. காட்பாதர் படத்தை சூப்பர் ஹிட் படமாக்கிய ரசிகர்களுக்கும் எனது நன்றி என்று அந்த அறிக்கையில் தெரிவித்து இருக்கிறார் நயன்தாரா.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.